அகத்தியர் ஆரூடத்தில் கடைசி ஆறு எண்களுக்கான பலன்களை இன்று பார்ப்போம்.
அஞ்சாதே கேளமப்பா ஆரூடத்தை
அனுதினமும் தோத்தரிப்பாய் நவக்கிரகத்தை
சஞ்சலங்கள் விலகுமப்பா தனமேசேரும்
தட்டாது உன்வார்த்தை மேன்மையாகும்
கொஞ்சநாள் இதுவரையில் கஷ்டப்பட்டாய்
கோபத்தால் பலபொருளும் நஷ்டப்பட்டாய்
வஞ்சகக் காரர்களால் வருத்தமுற்றாய்
வழுத்தினேன் இவ்வாரம் கழியத்தானே.
ஆரூடத்தில் ஐம்பத்தி ஒன்பது வந்திருப்பதால், கடந்த சில நாட்களாக துன்பப்பட்டாய், நட்டமும் அடைந்தாய். கோபத்தால் பல பொருட்களை இழந்தாய். ஏமாற்றுக் காரர்களால் ஏமாற்றப்பட்டு கவலை அடைந்தாய். இனி பயப்பட தேவையில்லை. தினமும் நவக்கிரகங்களை வணங்கிவர உனக்கு நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். இந்த வாரம் கழிந்த பிறகு உனக்கு நன்மையாக அமையும் என்கிறார் அகத்தியர்.
௬o. (60) வந்தால்..
வருத்தமே யுந்தனுக்கு அதிகமாகும்
வையகத்தில் நினைப்பதெல்லாம் அபலமாகும்
பொருத்தமுடன் செய்தொழிலில் நஷ்டமாகும்
புவிதனிலே மனைவிமக்கள் பகையதாகும்
கன்னியால் மனைதனிலே கலகமாகும்
கச்சிதமாய் வைத்தபொருள் களவுபோகும்
தரித்திரமே மேலோங்கும் சினேகம் நீங்கும்
தணியுமப்பா நாளுக்குநாள் தான்பாரே.
ஆரூடத்தில் அறுபது வந்திருப்பதால், உனக்கு மனக்கவலையே அதிகமாகும். செய்யும் தொழிலில் நட்டமே கிட்டும். மனைவி மக்களும் பகையாவார்கள். ஓரு பெண்ணினால் குடும்பத்தில் கலகம் ஏற்படும். வீட்டில் களவு போகும். நல்லவர்கள் நட்பு இல்லாது போகும். இந்த பிரச்சினைகளெல்லாம் படிப்படியாக குறைந்து பின் முற்றாக நீங்கும் என்கிறார் அகத்தியர்.
௬௧. (61) வந்தால்..
யோகதிசை உந்தனக்கு வந்ததாலே
ஒன்பதிலே குருபகவான் பார்வையாச்சு
தோகையரால் லாபமண்டு துயரம் பொச்சு
துரைத்தனத்தி லுந்தனக்கு தொழிலுண்டாச்சு
பாகமாய் வந்தபிணி பதங்கலாச்சு
பலவூர்கள் செய்தியதால் பாக்கியமாச்ச
ஆகமத்தின் மொழியிதுதான் உண்மையாச்சு
அறிவித்தேன் அருள்வாக்கை அறிகுவாயே.
ஆரூடத்தில் அறுபத்து ஒன்று வந்திருப்பது, ஒன்பதாமிடத்தில் குருபார்வையும் யோக திசையும் வந்திருப்பதை குறிக்கிறது. பெண்களால் லாபம் உண்டு. கவலைகள் எல்லாம் நீங்கும். மிகுந்த செல்வாக்கான இடத்தில் தொழில் வாய்க்கும். உனக்கு வந்த நோய்கள் எல்லாம் நீங்கும். பல இடங்களிலும் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். இந்த ஆரூடம் உண்மையாகும். இது அருளால் சொல்லும் வாக்கு என்கிறார் அகத்தியர்.
பனிரெண்டில் சூரியனும் உதித்ததாலே
பலபேர்களா லுனக்கு உதவியுண்டு
பணியணிகள் சேருமப்பா பலத்தலாபம்
பாவையர்க்கு கோபமதில் பாலனாகும்
துணிந்து நீ எத்தொழில் செய்தபோதும்
தொல்லையின்றி விர்த்திகர மாகுமப்பா
தணியுமப்பா உந்தனுடகஷ்ட மல்லாம்
தட்டாமல் ஒன்பதுநாள் கழிந்திடவே.
ஆரூடத்தில் அறுபத்து இரண்டு வந்திருப்பது, பன்னிரெண்டில் சூரியன் இருப்பதை குறிக்கும். பலர் உனக்கு உதவுவார்கள். நல்ல தொழிலும், ஆடை ஆபரணங்களும் சேரும். பலவித லாபம் உண்டாகும். உன் மனைவிக்கு ஆண்குழந்தை தரிக்கும். எந்த தொழிலை செய்தாலும் எந்த தடையும் இல்லாமல் விருத்தியாகும். இன்னும் ஒன்பது நாளில் உனக்கு இருக்கும் துன்பம் எல்லாம் விலகிவிடும் என்கிறார் அகதியர்.
௬௩. (63) வந்தால்..
பொல்லலாத சனி ராகு பகையினாலே
போகுமொரு காரியங்கள் தடங்கலாகும்
நில்லாது பலவிதமாய் அலையச்செய்யும்
நிஷ்டூரம் சினேகதிரால் கவலையாகும்
நல்லதைச் சொன்னாலம் பொல்லாப்பாகும்
நஷ்டமப்பா தொழில் முதறைநான் விந்தையுண்டு
சொல்லவே நாற்பத்தி மூன்று நாளில்
சுகமுண்டு பருதிகண்ட பனிபோலே.
ஆரூடத்தில் அறுபத்து மூன்று வந்திருப்பது, சனியும் ராகுவும் பகை பெற்றிருப்பதைக் குறிக்கும். எந்த செயலை செய்தாலும் அது தடங்கலாகும். அலைச்சல் அதிகமாகும். நண்பர்களால் கவலையடைய நேரும். நல்லதை சொன்னாலும் அது தீமையாகவே முடியும். தொழிலும் நட்டமடையும். இவை எல்லாம் நாற்பத்தி மூன்று நாளில் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும் என்கிறார் அகத்தியர்.
௬௪. (64) வந்தால்..
அகஸ்தியானர் கூறியதோர் வாக்கியத்தை
யாருமே நம்பிமோசம் போனதில்லை
சுகத்தைத்தரும் குடும்பத்தின் கஷ்டந்தீரும்
சுபக்கிரக பார்வையினால் லாபமுண்டாம்
மகப்பெறும் சுகவாழ்வும் பகையம் நீங்கும்
மண்ணதனை எடுத்தாலும் பொன்னதாகும்
ஜெகந்தன்னிலே எதிரியின்றி செழித்து வாழ்வாய்.
தியாகராஜன் குகனருளால் செப்பினேனே.
ஆரூடத்தில் அறுபத்தி நான்கு வந்திருப்பது, சுபக் கிரகங்களின் பார்வை கிடைத்திருப்பதை குறிக்கும். அதனால் குடும்பக் கவலை நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். சுகமான வாழ்வு அமையும். பகை கொண்டவர்கள் அதை மறந்து உன்னிடம் நட்பு கொள்வார்கள். நீ மண்ணை தொட்டாலும் பொன்னாகும் காலம் இது. உனக்கு எதிரி என்று யாருமே இனி இருக்க மாட்டார்கள். இந்த ஆரூடத்தை நம்பிய எவரும் மோசம் போனதில்லை. ஏன் என்றால் இந்த ஆருடத்தை சிவனின் அருளாலும், முருகனின் அருளாலும் பாடியிருக்கிறேன் என்கிறார் அகத்தியர்.
அகத்தியர் அருளிய அகத்தியர் ஆரூடம் இத்துடன் முற்றிற்று.
௫௨. (52) வந்தால்..
கஷ்டமே துலைந்து ஜெய காலமாச்சு
கந்தநாதன் கிருபையுனக் குண்டாச்சு
நஷ்டமெல்லா மொழிந்து நன்மையாச்சு
நலம்பெறவே குடும்பமதில் சுகமுண்டாச்சு
இஷ்டம்போல் தொழில் முறையில் லாபமாச்சு
இனத்தினிலே கல்யாணம் கூடலாச்சு
அஷ்டலஷ்மி வுன்மனையில் வாழலாச்சு
அதனாலே வேணபொருள் சேரலாச்சு.
௫௩. (53) வந்தால்..
விதிப்பயனிது வென்று நொந்திடாதே
உதித்தொரு கிரகத்தின் கோளாறிது
நிதியின்றி முன்கோடம் நீதான் கொண்டு
நிகழ்ந்தொணா பழிசெயலி லீடுபட்டு
பதியிழந்தாய் பொருளிழந்தாய் தொழிலிழந்தாய்
பரதேசிபோல் மனது கலங்கி நின்றாய்
சதியில்லை மாதம்மூன்று சென்றதானால்
சாதிப்பாய் பலவிதத்தில் ஜெயமேதானே.
௫௪. (54) வந்தால்..
சந்தேகங் கொள்ளாதே சாற்றுவேன் கேள்
சண்முகனின் பாதமலர் சாட்சியாக
உந்தனிட எண்ணமெல்லாம் முடியுமப்பா
உன்மனையில் வேணபொருள் சேருமப்பா
தன்மையுள்ளோர் உனக்குதவி யாவாரப்பா
தாட்டிகமாய் வியாபாரம் தழைக்குமப்பா
தொந்திரவு துணைநொயும் துலையுமப்பா
துதித்திடுவாய் உந்தன்குல தெய்வந்தன்னை.
௫௫. (55) வந்தால்..
இரண்டிலே சந்திரனும் மிருக்க தீதாம்
இன்பமுடன் மணமாலை சூட்ட தீதாம்
விரையமுண்டு மாடுமனை வாங்க தீதாம்
வெளுயூருக்கு சென்றாலும் மிகவும் தீதாம்
தரணிதனில் கொடுத்த கடன் கேட்க தீதாம்
தத்துவமாய் வியாபாரம் செய்ய தீதாம்
உரமான சினேகிதரால் உனக்கே தீதாம்
உத்தமனே வாரமைந்து கழித்திடாயே.
௫௬. (56) வந்தால்..
எண்ணிய எண்ணமெல்லாம் பலிக்குமப்பா
எத்தொழிலை செய்தாலும் லாபமப்பா
உன்மனதின் கவலையெல்லாம் தீருமப்பா
உடன் பிறந்தோர் பந்துக்களால் உதவியப்பா
வண்ணபகை யாள ருறவாவாரப்பா
வந்தநோய் வழிவிலகி நிற்குமப்பா
நன்மையுடன் பலபொருளும் சேருமப்பா
நாற்பத்தி ரெண்ட நாளில் நலமுண்டாமே.
௫௭. (57) வந்தால்..
ஆறிலே சூரியனு மிருப்பதாலே
அனுகூல மாகுமப்பா உனது எண்ணம்
போரிலே நின்றாலும் ஜெயமே யுண்டு
போன பொருள் தவணையின்றி வந்து சேரும்
கோரிய வியாபாரம் லாபங்காணும்
கோவுடனே மனைகோல பாக்ய மண்டாகும்
பாரிலே பதிமூன்று நாட்குபின்னே
பலவிதத்தில் சந்தோச மடைகுவாயே.
௫௮. (58) வந்தால்..
குருமுனியின் வாக்கியந்தான் பிசகாதப்பா
குறித்துள்ள எண்ணமது பலியாதப்பா
ஒருவரிட சொல்கேட்க லாகாதப்பா
உடன்பிறந்தோர் பந்துக்களும் பகைப்பாரப்பா
தருமமே செய்தாலும் வறுமையப்பா
தரித்திரத்தால் பொருள் விரைய மாகுமப்பா
ஊருமாறி ஊரைவிட்டும் ஒட்டுமப்பா
உத்தமனே ஒருமாதம் கழித்திடாயே.
கஷ்டமே துலைந்து ஜெய காலமாச்சு
கந்தநாதன் கிருபையுனக் குண்டாச்சு
நஷ்டமெல்லா மொழிந்து நன்மையாச்சு
நலம்பெறவே குடும்பமதில் சுகமுண்டாச்சு
இஷ்டம்போல் தொழில் முறையில் லாபமாச்சு
இனத்தினிலே கல்யாணம் கூடலாச்சு
அஷ்டலஷ்மி வுன்மனையில் வாழலாச்சு
அதனாலே வேணபொருள் சேரலாச்சு.
ஆரூடத்தில் ஐம்பத்தி ரெண்டு வந்திருப்பது, உன் துன்பம் எல்லாம் தீர்ந்து நன்மையான காலம் வந்திருப்பதைக் குறிக்கிறது. இனிவரும் நாட்கள் நன்மையானதாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்சியும் நிம்மதியும் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்கள் வீட்டில் திருமணம் நடைபெறும். உன் வீட்டில் அஷ்ட லட்சுமி குடியிருப்பாள். அதனால் எல்லா நன்மையும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
௫௩. (53) வந்தால்..
விதிப்பயனிது வென்று நொந்திடாதே
உதித்தொரு கிரகத்தின் கோளாறிது
நிதியின்றி முன்கோடம் நீதான் கொண்டு
நிகழ்ந்தொணா பழிசெயலி லீடுபட்டு
பதியிழந்தாய் பொருளிழந்தாய் தொழிலிழந்தாய்
பரதேசிபோல் மனது கலங்கி நின்றாய்
சதியில்லை மாதம்மூன்று சென்றதானால்
சாதிப்பாய் பலவிதத்தில் ஜெயமேதானே.
ஆரூடத்தில் ஐம்பத்தி மூன்று வந்திருப்பது, உன்னை கெட்ட கிரகத்தின் கோளாறுகள் வருத்துவதைக் குறிக்கிறது. இது என் விதி என்று வருந்தி வணங்கும் தெய்வங்களையும், பெற்றோர்களையும் நிந்தனை செய்யாதே. இதற்கு முன்னும் உனது முன் கோபத்தினால் வீட்டை விட்டு பிரிந்து சென்றாய். கையில் இருந்த பொருட்களையும் இழந்தாய். தொழிலையும் இழந்தாய். இப்போது மீண்டும் மனம் கலங்கி கவையுடன் நிற்கிறாய். இவை எல்லாம் இன்னும் மூன்று மாதத்தில் தீரும். அதன் பின் பல வழிகளிலும் சாதித்து வெல்வாய் அதுவரை பொறுமையுடன் இருக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.
௫௪. (54) வந்தால்..
சந்தேகங் கொள்ளாதே சாற்றுவேன் கேள்
சண்முகனின் பாதமலர் சாட்சியாக
உந்தனிட எண்ணமெல்லாம் முடியுமப்பா
உன்மனையில் வேணபொருள் சேருமப்பா
தன்மையுள்ளோர் உனக்குதவி யாவாரப்பா
தாட்டிகமாய் வியாபாரம் தழைக்குமப்பா
தொந்திரவு துணைநொயும் துலையுமப்பா
துதித்திடுவாய் உந்தன்குல தெய்வந்தன்னை.
ஆரூடத்தில் ஐம்பத்தி நான்கு வந்திருப்பதால். சந்தேகப்படாதே! சண்முகன் சட்சியாக உன் எண்ணங்கள் எல்லாம் இனி நிறைவேறும். உன் வீட்டில் பொருட்கள் சேரும். உயர் பதவியில் இருப்பவர்கள் உனக்கு உதவுவார்கள். வியாபாரம் விருத்தியாகும். அதிக சிரமம் கொடுத்து வந்த நோய் விலகும். அத்துடன் உன் குல தெய்வத்தை வணங்கி வர மேலும் பல நன்மைகளை அடையலாம் என்கிறார் அகத்தியர்.
௫௫. (55) வந்தால்..
இரண்டிலே சந்திரனும் மிருக்க தீதாம்
இன்பமுடன் மணமாலை சூட்ட தீதாம்
விரையமுண்டு மாடுமனை வாங்க தீதாம்
வெளுயூருக்கு சென்றாலும் மிகவும் தீதாம்
தரணிதனில் கொடுத்த கடன் கேட்க தீதாம்
தத்துவமாய் வியாபாரம் செய்ய தீதாம்
உரமான சினேகிதரால் உனக்கே தீதாம்
உத்தமனே வாரமைந்து கழித்திடாயே.
ஆரூடத்தில் ஐம்பத்தி ஐந்து வந்திருப்பது, இரண்டாம் இடத்தில் சந்திரன் வந்திருப்பதைக் குறிக்கும். இதனால் நன்மை நடக்காது. திருமணம் செய்யவும், புது வீடு, கால் நடைகள் வாங்கவும் இந்த காலகட்டம் நல்லதல்ல. வெளியூருக்கு செல்வதும் தீமையை கொடுக்கும். கொடுத்த கடன் கேட்க சென்றாலும் தீமையே நடக்கும். வியாபாரமும் தீமையிலேயே முடியும். அன்புமிக்க நண்பர்களாலும் தீமையே நடக்கும்.ஆனாலும் ஐந்து வாரம் பொறுமையாக இருந்தால் அதன் பின் நன்மை கிடைக்கும் என்கிறார் அகத்தியர்.
௫௬. (56) வந்தால்..
எண்ணிய எண்ணமெல்லாம் பலிக்குமப்பா
எத்தொழிலை செய்தாலும் லாபமப்பா
உன்மனதின் கவலையெல்லாம் தீருமப்பா
உடன் பிறந்தோர் பந்துக்களால் உதவியப்பா
வண்ணபகை யாள ருறவாவாரப்பா
வந்தநோய் வழிவிலகி நிற்குமப்பா
நன்மையுடன் பலபொருளும் சேருமப்பா
நாற்பத்தி ரெண்ட நாளில் நலமுண்டாமே.
ஆரூடத்தில் ஐம்பத்தி ஆறு வந்திருப்பதால், எண்ணிய எண்ணமெல்லாம் பலிக்கும். எந்தத் தொழிலை செய்தாலும் லாபமே கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் எல்லாம் இனி தீரும். சகோதரர்கள், உறவினர்கள் எல்லோரும் உதவுவார்கள். பகையாளிகளும் பகையை விட்டு ஒன்று சேர்வார்கள். நன்மையான பல பொருட்கள் சேரும். உன்னை வருத்தும் நோய் விலகும். அத்துடன் இன்னும் நாற்பத்தியிரண்டு நாளில் பல பொருட்கள் சேர்வதுடன் நன்மைகளும் நடக்கும் என்கிறார் அகத்தியர்.
௫௭. (57) வந்தால்..
ஆறிலே சூரியனு மிருப்பதாலே
அனுகூல மாகுமப்பா உனது எண்ணம்
போரிலே நின்றாலும் ஜெயமே யுண்டு
போன பொருள் தவணையின்றி வந்து சேரும்
கோரிய வியாபாரம் லாபங்காணும்
கோவுடனே மனைகோல பாக்ய மண்டாகும்
பாரிலே பதிமூன்று நாட்குபின்னே
பலவிதத்தில் சந்தோச மடைகுவாயே.
ஆரூடத்தில் ஐம்பத்தி ஏழு வந்திருப்பது, ஆறாம் இடத்தில் சூரியன் வந்திருப்பதைக் குறிக்கும். உன் எண்ணம் எல்லாம் நினைத்தபடியே நடக்கும். போருக்கு சென்றாலும் வெற்றியே கிடைக்கும். கைவிட்டு போன பொருட்கள் முழுமையாக வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பசுமாடுகள் வாங்கவும் வீடு கட்டவும் வாய்ப்புக் கிடைக்கும். இன்னும் பதின் மூன்று நாட்களுக்குப் பின் பல வழிகளிலும் உனக்கு சந்தோசம் கிட்டும் என்கிறார் அகத்தியர்.
குருமுனியின் வாக்கியந்தான் பிசகாதப்பா
குறித்துள்ள எண்ணமது பலியாதப்பா
ஒருவரிட சொல்கேட்க லாகாதப்பா
உடன்பிறந்தோர் பந்துக்களும் பகைப்பாரப்பா
தருமமே செய்தாலும் வறுமையப்பா
தரித்திரத்தால் பொருள் விரைய மாகுமப்பா
ஊருமாறி ஊரைவிட்டும் ஒட்டுமப்பா
உத்தமனே ஒருமாதம் கழித்திடாயே.
ஆரூடத்தில் ஐம்பத்தி எட்டு வந்திருப்பதால், இப்போது மிகவும் பொறுமையாக இருக்கவேண்டும். எண்ணிய எண்ணம் எதுவும் நடக்காது. ஒருவரின் சொல்லும் கேட்காதே. சகோதரர்களும் உறவினரும் பகைவர் ஆவார்கள். தருமம் செய்தாலும் வறுமையே வரும். சேமிப்பும் வீண் விரயமாகும். ஊர் விட்டு ஊர் மாறிச் சென்று அலைய வேண்டி ஏற்படும். இவை எல்லாம் இன்னும் ஒருமாததில் நீங்கும் என்கிறார் அகத்தியர்.
நண்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க, நாளைய பதிவில் அகத்தியர் ஆரூடம் தொடரை மின்னூலாக பகிர்ந்து கொள்கிறேன்.
அகத்தியர் ஆரூடத்தில் இன்று நாற்பத்தி ஐந்தில் இருந்து ஐம்பத்தியொன்று வரையிலான எண்களுக்கான பலனை இன்று பார்ப்போம்.
௪௫. (45) வந்தால்..
அலட்சியமாய் நினைத்ததெல்லாம் அதிர்ஷ்டமாச்சு
அஷ்டமத்தில் புதபகவான் அமரலாச்சு
துலக்கமுள்ள பெரியோர்க ளுதவியாச்சு
துன்பமெலா மனைவிட்டு அற்றுபோச்சு
நலம் பெறவே வலதுபக்கம் மச்சமொன்று
நட்சத்திரம் போலுனக்கு அமையலாச்சு
கலகமிலா லட்சுமியின் கருணாயலே
கண்டிடுவா யிருபத்து நாளிலுண்மை.
ஆரூடத்தில் நாற்பத்தி ஐந்து வந்திருப்பதால், எட்டாமிடத்தில் புதன் வந்திருப்பதை குறிக்கிறது. இதனால் இது பயன் தராது என்று நீ அலட்சியமாக விட்டதெல்லாம் இனி நன்மையை கொடுக்கும். பெரியவர்கள் உதவியும் கிடைக்கும். துன்பங்கள் எல்லாம் வீட்டை விட்டு சென்றுவிடும். உனக்கு வலது பக்கதில் மச்சம் ஒன்று நட்சத்திரம் போல் அமைந்திருக்கும். லட்சுமியின் கருணையால் இருபத்தியொரு நாளில் இந்த உண்மைகளை கண்டுகொள்ள முடியும் என்கிறார் அகத்தியர்.
௪௬. (46) வந்தால்..
உலகிலே நீயடையாத துன்பமில்லை
உறன்முறையா லுந்தனுக்கு உதவியில்லை
நலமொன்று குடும்பத்தி லடைந்ததில்லை
நஷ்டமே டைந்த பொருள் கணக்கேயில்லை
மலைத்தவுன் மனநோய்க்கு மகிழ்ச்சியில்லை
கலக்கமது உனைவிட்டு போவதில்லை
கண்டிதமாய் நவமாதம் கழித்திடாயே.
ஆரூடத்தில் நாற்பத்தி ஆறு வந்திருப்பதால், இதுவரை நீ அடைந்த துன்பங்களுக்கு அளவேயில்லை. உறவினர்கள் உதவியும் உனக்கு கிடைக்கவில்லை. இதுவரை நன்மை என்று எதுவும் உன் குடும்பத்திற்கு நடந்ததில்லை. நட்டமடைந்த பொருட்களுக்கும் கணக்கில்லை. மகிழ்ச்சி இல்லாமல் மன நோயால் பாதிக்க பட்டவர் போல் இருக்கிறாய். கலக்கம் உன்னைவிட்டு போகவில்லை. இன்னும் ஒன்பது மாதம் பொறுமையுடன் இருந்தால் அதன் பிறகு நன்மை உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
கிரகத்தின் தோஷமெல்லா மொழிந்துபோச்சு
கீர்த்தியுடன் எண்ணமது பலிதமாச்சு
உரமிகுத்த பந்துக்களால் உதவியாச்சு
உன்னுடைய வியாபாரம் லாபமாச்சு
சிரமமிகம் நோய் விலகும் காலமாச்சு
சிக்கனமாய் பிக்குகளும் ஒழியலாச்சு
தரணிதன்னில் தழைத்தோங்கி வாழலாச்சு
தாட்டிகமாய் நாளேழில் சுகமுண்டாச்சு.
ஆரூடத்தில் நாற்பத்தியேழு வந்திருப்பது, உன் கெட்ட கிரகங்களெல்லாம் விலகி விட்டதைக் குறிக்கும். இனி உறவினர்கள் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். பலவித சிரமங்களைக் கொடுத்த நோயும் விலகும் காலம் இது. உன் சேமிப்பால் கடன்கள் யாவும் தீரும். பூமியில் சிறப்புடன் வாழ்வாய். இவை எல்லாம் இந்த ஆருடம் பார்த்த நாளில் இருந்து எழு நாளில் நடக்கும் என்கிறார் அகத்தியர்.
௪௮. (48) வந்தால்..
உத்தனுடைய எண்ணமெல்லாம் உறுதியாச்சு
உடன்பிறந்தோர் பந்துக்களால் உதவியாச்சு
சொந்தமான உன் தொழிலில் லாபமாச்சு
சுந்தரியால் உன்குடும்பம் செழிக்கலாச்சு
மந்தமதியுள்ளோரின் நேசம் போச்சு
மகாநோயும் தீர்ந்து மணம் கூடலாச்சு
எந்தமுகம் போனாலும் தங்கமுகமாச்சு
ஏழைகட்கு தர்மம் செய்வாய் ஈசன் சாட்சி
ஆரூடத்தில் நாற்பத்தி எட்டு வந்திருப்பதால், உன் எண்ணங்களெல்லாம் சிறப்பாக நிறைவேறும். சகோதரர்களாலும் சொந்தங்களாலும் உதவி கிடைக்கும்.செய்யும் தொழில் விருத்தி அடையும். மனைவியால் உனது குடும்பத்தில் அமைதி கிட்டும். உனைக் கெடுக்க நினனத்த வஞ்சகர்களின் உறவும் விட்டுப் போய்விடும். நோயும் குணமடையும். வீட்டில் திருமணமாகாமல் இருப்போருக்கு திருமண பாக்கியம் கிட்டும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பும் மரியாதைகளும் கிடைக்கும். எழைகளுக்கு தருமம் செய்!, ஈசன் சாட்சியாக இருந்து எல்லாவற்றையும் நிறைவேற்றி வைப்பார் என்கிறார் அகத்தியர்.
௪௯. (49) வந்தால்..
அப்பனெ வருடமென்றாய் கஷ்டப்பட்டாய்
அதற்கு முன்னும் வெகுநாள் கவலையுற்றாய்
செப்பவே மாதமொன்று சென்றதானால்
சித்தத்தில் நினைத்த எண்ணம் ஜெயமேயாகும்
தப்பாது உன்வாக்கு தொழிலுமோங்கு
தனபாலம் மிகவுண்டு நலியம் நீங்கும்
ஒவ்பில்லா மணங்கூடும் மகப்பேறாகும்
உலகமதில் அகஸ்தீயனார் உரைத்தவாக்கு.
ஆரூடத்தில் நாற்பத்தி ஒன்பது வந்திருப்பது, நீ ஒரு வருடமாக துன்பமும் அதற்கு முன்னரும் பல நாட்களாக கவலைகளையும் அடைந்ததைக் குறிக்கும். ஆனால் இந்த ஆரூடம் பார்த்த நாளில் இருந்து ஒரு மாதம் முடிந்தபின்னர், நினைத்த எண்ணம் எல்லாம் இனிதாக நிறைவேறும். உன் வாக்கு பிழைக்காது. தொழிலும் சிறப்பாக நடைபெறும். லாபம் அதிகரிக்கும். துன்பங்கள் விலகும். திருமண யோகம் கிட்டும். குழந்தை பேறும் உண்டாகும். இது உலகத்தவருக்கு அகத்தியர் சொல்லும் வாக்கு என்கிறார்.
நினைத்து நீ எடுத்ததொழில் பலிக்குமப்பா
நிச்சயமாய் புவிதனிலே அடைவாய் லாபம்
உனைகெடுக்க வேணபேர் கூடினாலும்
உறவற்று அவர்கூட்ட மொழிந்துபோகும்
சினந்தவிர்த்து உந்தன்குல தெய்வந்தன்னை
சிறப்புடனே பூஜையது செய்வாயானால்
கணமுடனே உலகமதில் வாழ்வாயென்று
கலக்கமிலா குருமுனியும் உரைத்திட்டாரே.
ஆரூடத்தில் ஐம்பது வந்திருப்பதுதால், நீ நினைத்து செய்யும் தொழில் யாவும் சிறப்பாக நடைபெற்று அதிக லாபம் கிடைக்கும். உன்னைக் கெடுக்க நினைத்து எத்தனை பேர் கூட்டாக சதி செய்தாலும் அவர்கள் கூட்டமே அழிந்து போகும். நீ அதற்காகக் கோபம் அடையாமல், அதைப் பொருட்படுத்தாமல் குலதெய்வத்தை வணங்கிவர உலகில் சிறப்புடன் வாழ்வாய் என்கிறார் அகத்தியர்.
௫௧. (51) வந்தால்..
கேதுசனி ராகுனக்கு பகைதானப்பா
கெடுதியுண்டு வாழ்வினிலே மனக்கிலேசம்
வாதுகளும் வம்புகளும் வந்தேதீரும்
வகைதப்பி யிடத்தைவிட்டு மாற்றிவைக்கும்
மாதுமக்கள் பந்துக்களும் மனைவெறுப்பார்
மனதுவைத்து செய்வதெல்லாம் நஷ்டமாகும்
ஏதுயினி செய்வதென யேங்கிடாதே
இடைஞ்சலெல்லாம் தீருமப்பா வாரமாறில்.
ஆரூடத்தில் ஐம்பத்தி ஒன்று வந்திருப்பது, உனக்கு சனி ராகு கேது பகையாக இருப்பதைக் குறிக்கும். இதனால் குடும்பத்தில் பலவிதமான கவலைகள் ஏற்படும். எடுத்ததெற்கெல்லாம் வம்பு வழக்குகள் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வேறிடம் செல்ல வேண்டி ஏற்படும். மனைவி, பிள்ளைகள் உறவினர்கள் எல்லோரும் உன்னை வெறுப்பார்கள். மனம் விரும்பி செய்யும் காரியங்கள் எல்லாம் நட்டமாகும். இனி என்ன செய்ய என்று ஏங்காதே. இந்த துன்பம் எல்லாம் ஆறு வாரத்தில் நீங்கிவிடும் என்கிறார் அகத்தியர்.
இன்றைய பதிவில் முப்பத்தி எட்டு முதல் நாற்பத்தி நான்கு வரையிலான எண்களின் பலன்களைப் பார்ப்போம்.
இடம்விட்டு இடம்போக எண்ணமுண்டு
இருந்தாலும் அதனாலே லாபமுண்டு
தீடமான பெரியோரால் நன்மையுண்டு
தென்மேற்கு திசையிலிருந்து செய்தியுண்டு
திடமதிலே உனதுகுறை வேணதுண்டு
தைரியமாய் எத்தொழிலும் செய்யநன்று
முடவனெனும் சனியானவன் விலகிவிட்டான்
மூன்றுநாள் போகபின்னே சுகமுண்டாமே.
ஆரூடத்தில் முப்பத்தி எட்டு வந்திருப்பதால், முடவன் என்று சொல்லப்படும் சனியின் பார்வை உன்னை விட்டு விலகிவிட்டதாக கொள்ளலாம். இப்போது இருக்கும் இடம்விட்டு வேறிடம் போக எண்ணியிருக்கிறாய்!, அதனால் லாபமுண்டாகும். பெரியோர்களால் உதவியும் நன்மையும் உனக்கு உண்டு. தென்மேற்கு திசையிலிருந்து நன்மையான செய்திகள் வந்து சேரும். எந்த விதமான தொழிலை செய்தாலும் அதனால் லாபம் கிடைக்கும். இன்னும் மூன்று நாள் கடந்த பின்னர் அனைத்தும் நன்மையாகும் என்கிறார் அகத்தியர்.
௩௯. (39) வந்தால்..
பருதியது பத்தினிலே உதயமாச்சு
பகைவர்களின் பூண்டடியோ டொழியலாச்சு
வருத்தமே தந்தபிணி விலகலாச்சு
வறுமையுடன் மனக்குறையு மற்றுப்போச்ச
நிருபமது வெளியிலிருந்து வருகலாச்சு
நீ நினைத்த எண்ணமது ஜெயமுண்டாச்சு
பெருமைபெற உந்தனுக்கு காலமாச்சு
பேசுமப்பா வுன்வீட்டில் கெவுளிதானே.
ஆரூடத்தில் முப்பத்தி ஒன்பது வந்திருப்பது, உனக்கு பத்தாவது விட்டில் சூரியன் வந்திருப்பதைக் குறிக்கும். இதனால் லாபங்களெல்லாம் உண்டாகும். உன் எதிரிகள் பூண்டோடு ஒழிவர். நோய் விலகும். உனது வறுமையும் மனக் கவலையும் நீங்கும். வெளியிலிருந்து நன்மையான செய்திகள் வரும். நினைத்த எண்ணமெல்லாம் பலிக்கும். நீ பெருமையடையும் காலம் இது. உன் வீட்டில் பல்லி சொல்லும் என்கிறார் அகத்தியர்.
சளியவன் வக்கரித்ததால் சண்டைநேரும்
சகலவித காரியமும் தடங்கலாகும்
பணிவான மனிதர்களும் பகையேயாவார்
பலபொருளும்சேதமுண்டு காகும்பேளவரே
துணிவான காரியத்தை செய்ய நேரும்
துன்பமிக நேருமப்பா வியாதிகாணும்
கனிவான கடனாலே மனஞ்சஞ்சலிக்கும்
கழித்திடுவாய் நாற்பத்தி ஏழுநாளே.
ஆரூடத்தில் நாற்பது வந்திருப்பது, சனி வக்கரித்திருப்பதைக் குறிக்கும். இதனால் சகல காரியஙக்ளும் தடங்கலாகும். சொந்த பந்தங்களும் உன்னை தூற்றுவார்கள். பலவிதத்திலும் பொருட்சேதம் உண்டாகும். முன்பின் யோசியாமல் காரியங்களைச் செய்து துன்பமடைய நேரும். நோய் நொடி ஏற்படும். கடன்காரர்களின் தொல்லையால் மன வெறுப்பு உண்டாகும். இவையெல்லாம் இன்னும் நாற்பத்தியேழு நாளில் தீரும் என்கிறார் அகத்தியர்.
௪௧. (41) வந்தால்..
வையகத்தி லுன்கவலை நீங்கலாச்சு
வைரிகளும் உனைக்கண்டு ஏங்கலாச்சு
கைவிட்டு போனபொருளண் வருகலாச்சு
கன்னியர்க்கு மனைதனிலே கர்ப்பமாச்சு
பையவே வருத்தும் பிணி பறந்துபோச்சு
பாலகனே வெளியூரில் லாபமாச்சு
கைத்தொழிலும் வர்த்தகமும் ஓங்கலாச்சு
கருத்துடனே ஏழைகட்கு தருமஞ்செய்ய.
ஆரூடத்தில் நாற்பத்தி ஒன்று வந்திருப்பதால், இப்பொழுது உன் கவலைகளெல்லாம் நீங்கி வருகிறது. எதிரிகளும் உன்னைக் கண்டு அஞ்சுவார்கள். கைவிட்டுப்போன பொருள் வந்து சேரும். உன் மனைவிக்கு கர்ப்பந்தரிக்கும். உன்னை கவலைக்குள்ளாகி வந்த நோய் நீக்கும். வெளியூரில் இருந்து லாபம் கிடைக்கும். வியாபாரமும் தொழிலும் பெருகும். கவனமாக ஏழைகளுக்கு தர்மம் செய்து வர நாளுக்கு நாள் நன்மை அதிகரிக்கும் என்கிறார் அகத்தியர்.
மனதிலோர் எண்ணத்தைக் கொண்டு நீதான்
மாதமொன்றாய் கவலையுற்று வருந்துகின்றாய்
இனமுள்ளவோர் பெண்மணியின் கலகத்தாலே
இடையூறு மிகவுண்டுன் குடும்பந்தன்னில்
தனதாண்யம் நிலபலமும் பொருளும் தோற்றாய்
நிஷ்டூருனாக நின்றாய் வுன்குடும்பத்தாருக்கு
தினமும் நீ நவக்கிரக பூஜை செய்தால்
தீவினைகள் தீர்ந்து சுகமடைவாய் தானே.
ஆரூடத்தில் நாற்பத்தியிரெண்டு வந்திருப்பதால், நீ மனதில் ஒர் எண்ணத்தை நினைத்து ஒருமாதமாக கவலைப்படுகிறாய். உன் குடும்பத்தில் ஒரு சிவந்த நிறமுள்ள பெண்மணியினால் கலகம் உண்டாகி, அதனால் அதிக இடையூறுகள் அதிகம் ஏற்படும். இதனால் பலவிதத்திலும் பொன் பொருள் நிலம் எல்லாம் இழந்தாய். குடும்பத்தவர்களுக்கு பகைவன் போலானாய். நாள் தோறும் நவக்கிரகத்தை வணங்கி வந்தால் இவை தீரும் என்கிறார் அகத்தியர்.
௪௩. (43) வந்தால்..
ஒன்பதிலே புதபகவான் உனக்கமர்நத
உறுதியினால் நினைத்த எண்ணம் பலிதமாக
கண்ணியமாய் வாழ்ந்திடுவாய் கெண்டம் போச்சு
கடன் கொடுத்த பொருள் வரவும் காலமாச்சு
மண்மனையும் பொன்பொருளும் சேரலாச்சு
மாடாடு கொள்ளவும் பால்பாக்கியமாச்சு
துன்மார்க்கர் சகவாசம் வைத்திடாமல்
தொல்லுகில் நல்விதமாய் வாழ்ந்திடாயே.
ஆரூடத்தில் நாற்பத்தி மூன்று வந்திருப்பது, புதன் ஒன்பதாவது விட்டில் அமர்ந்திருப்பதைக் குறிக்கும். கண்ணியமான வாழ்க்கை வாழ்வாய். உனக்கிருந்த கண்டம் போய்விட்டது. கடன்கொடுத்த பொருள் கை வரும் காலம் இது. நிலம் வாங்கவும் மனை வாங்கவும் பொன் பொருள் சேரவும் உகந்த நேரமிது. ஆடு மாடு வாங்கவும் முடியும். ஆனால் தீயவர்களுடன் தொடர்பு வைக்காதே, அவர்களை விட்டு நிங்கினால் உனக்கு ஒருவித கவலையும் உண்டாகாது என்கிறார் அகத்தியர்.
௪௪. (44) வந்தால்..
பாம்பின் தெரைபோல் பதறிடாதே
பதட்டமாய் ஒருவரையம் நிந்திக்காதே
விம்புகொண்டு குடும்பத்தை வெறித்திடாதே
வெகுகலகம் உன்மீத வரும்தப்பாதே
சோம்பல்கொண்டு செய்தொழிலை விட்டிடாதே
சித்தமது நோய்நொடியாயல் கலங்கிடாதே
ஆம்செவ்வாய் சனியாலே தோஷமுண்டு
ஆதரவாய் நவக்கிரகபூஜை செய்ய.
ஆரூடத்தில் நாற்பத்தி நான்கு வந்திருப்பதால், உனக்கு செவ்வாய் மற்றும் சனியின் தோசமுள்ளது. இதன் காரணத்தினால் பாம்பின் வாயில் சிக்கிய தேரையைப் போல் பதறி ஒருவரையும் நிந்தனை செய்யாதே. அதிக துன்பத்தால் குடும்பத்தை வெறுக்காதே. பலவிதமான கலகங்கள் உன் குடும்பத்திற்கு ஏற்படும். சோம்பல் குணம் வந்து தொழிலைக் குழப்பும். நோயால் பாதிக்கப்படுவாய். கவலைப் படாமல் நவக்கிரகத்தை வணங்கிவர நன்மையுண்டாகும் என்கிறார் அகத்தியர்.
அகத்தியர் ஆரூடம் தொடரில் இதுவரையில் முதல் முப்பது எண்களுக்கான பலன்களைப் பார்த்தோம். இனி வரும் நாட்களில் மீதமிருக்கும் எண்களின் பலன்களையும் பார்ப்போம்.
௩௧. (31) வந்தால்..
இப்பொழுது உந்தனுக்கு கெட்டகாலம்
இருந்தாலும் பயமில்லை சுகமுண்டாகும்
கொப்பெனவே குடும்பமதில் கலகமாகும்
கொடுத்ததை கேட்டாலே பகையுமுண்டாகும்
ஒப்பவே வுபகாரம் செய்திட்டாலும்
உலகினிலே அபகார மாக நேரும்
தப்பாது தொழில் முறையில் நஷ்டமாகும்
தயங்காமல் பத்துவார மிருந்திடாயே.
ஆரூடத்தில் முப்பத்தியொன்று வந்திருப்பதால், தற்சமயம் உனக்கு நல்லவை எதுவும் நடக்காது. ஆனாலும் பயம் கொள்ளத் தேவை இல்லை. இந்த நிலை மாறும். இக் காலத்தில் உன் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் உண்டாகும். கொடுத்த பொருளை கேட்கச் சென்றால் பகைமை உண்டாகும். யாருக்கேனும் உதவி செய்யதால் அது கெடுதலாகவே முடியும். செய்யும் தொழிலில் நட்டம் ஏற்படும். இவை எல்லாம் இன்றிலிருந்து பத்து வாரத்தில் தீரும் என்கிறார் அகத்தியர்.
௩௨. (32) வந்தால்..
குருபகவான் ஒன்பதிலே இருக்க நன்றாய்
குவலயத்தில் சுபகாரியம் முடிக்கநன்றாம்
சிறுவர்களை பள்ளிதனில் சேர்க்கநன்றாம்
சிறப்புடனே வியாபாரம் செய்ய நன்றாம்
உருக்கமுடன் மனைகோல மிகவும் நன்றாம்
வெளியூர்க்கு போகவும் லாபமுண்டாம்
பொருள்தனை கொடுக்கவும் வாங்கவும் நன்றாம்
பிணிநீங்கும் மருந்துண்ண நன்மைதானே.
ஆரூடத்தில் முப்பத்தியிரண்டு வந்திருப்பதால், ஒன்பதாவது வீட்டில் குருபகவான் இருப்பதைக் குறிக்கிறது. குடும்பதில் சுப காரியங்கள் செய்யவும், பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கவும், புதிய வியாபாரமும் தொடங்கவும், நிலம் வாங்கவும், வீடுகட்டவும் நல்ல தருணமாக இது இருக்கிறது. வெளியூருக்கு போகும் வாய்ப்பும், கொடுக்கல் வாங்கல் செய்யவும், நோய் தீர மருந்து உட்கொள்ளவும் சிறப்பான காலம் இது என்கிறார் அகத்தியர்.
ஏழுதனில் சந்திரனு மிருப்பதாலே
எடுத்ததெல்லா முந்தனுக்கு பெருத்தலாபமாம்
குழுமுந்தன் மைந்தர்களால் சுகமேயுண்டு
சொல்மொழிகள் தவறாது நடந்தேதீரும்
வாழுமுந்தன் மனைதனிலே பொருள் கிடைக்கும்
வகைதப்பிச் சென்றவரும் வந்துசேர்வார்
பாழுள்ள நோய்விலகும் நாளீரெட்டில்
ஆரூடத்தில் முப்பத்திமூன்று வந்திருப்பதால், செய்யும் செயல்கள் அனைத்து அதிக லாபத்தை கொடுக்கும். பிள்லைகளால் நன்மை உண்டாகும். சென்ன வாக்கு தவறாது நிறைவேறும். வாழும் வீட்டில் பொருள் சேரும். என்ன செய்வதென்று அறியாமல் வீடை விட்டு சென்றவர்கள் திரும்பி வருவார்கள். தொல்லை கொடுத்த நோய் விலகும். இவை அனைத்தும் இன்றிலிருந்து பதினாறு நாட்களில் நடக்கும் என்கிறார் அகத்தியர்.
௩௪. (34) வந்தால்..
சதுர்கோண கேதுபகை சதிக்குள்ளாக்கும்
சாராத குற்றமெல்லாம் சார்ந்ததேதீரும்
பிதுர் சொத்து இருந்தாலும் பாழாப்போகும்
பித்தமுடன் வாதகரம் தோஷங்காணும்
கதிகலங்கி காசினியில் நிற்கநேரும்
காதார துர்செய்தி கேட்கலாகும்
விதிபிசகா தானாலும் மதியைக்கொண்டு
மண்ணுலகில் வாரமெட்டு கழித்திடாயே.
ஆரூடத்தில் முப்பத்திநான்கு வந்திருப்பது, உனக்கு கேது பகை பெற்றிருப்பதைக் குறிக்கும். செய்யாத தவறெல்லாம் செய்ததாக குற்றம் சாட்டப்படுவாய். குடும்ப சொத்து இருந்தாலும் பயன் தராது. பித்தம், வாதம் ஆகியவற்றால் உருவாகும் நோய்கள் உண்டாகும். செய்வதறியாது கலங்கி காசியில் சென்று நிற்க வேண்டி ஏற்படும். கெட்ட செய்திகளையே கேட்க வேண்டி ஏற்படும். இந்தப் பலன்களை மாற்ற முடியாது என்றாலும் அவதானமாக எட்டுவாரத்தைக் கடந்தாயானால் நன்மை உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
௩௫. (35) வந்தால்..
அம்புவியி லுந்தனிட கிரகமெல்லாம்
அனுகூல மாயிருக்க பயமேயில்லை
நம்பிய உன் யெண்ணமெலாம் பலிக்குமப்பா
நாட்டமிடும் வியாபாரமும் விர்த்தியாகும்
கொம்யனையாள் தன்னாலே குடிவிளங்கும்
குடும்பமதில் மனஸ்தாபம் விலகிப்போகும்
ஒன்பதுநாள் நவக்கிரக பூஜைசெய்ய
ஒழியும்மப்பா உனைபிடித்த பீடைதானே.
ஆரூடத்தில் முப்பத்தி ஐந்து வந்திருப்பதால், கிரகங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றது. இனி பயமில்லை. உன் எண்ணம் எல்லாம் கைகூடும். நட்டத்தில் இருக்கும் வியாபாரம் விருத்தியடைந்து லாபம் கிட்டும். உன் மனைவியின் மகத்துவத்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும். குடும்பத்தாருடன் இருக்கும் மனக்கசப்பு நீங்கும் என்று சொல்லும் அகத்தியர் ஒன்பது நாட்கள் தொடர்ந்து நவக்கிரகங்களை வழிபட்டு வந்தால் உனக்கிருக்கும் துன்பம் எல்லாம் விலகும் என்கிறார்.
ஜெயமாகும் உன்மனதில் நினைத்தஎண்ணம்
செல்வனே சித்தமது கலங்கிடாதே
துயர்கொண்டு பிரிந்தவரும் வந்துசேர்வார்
துணைவியுடன் மாடுமனையோடு வாழ்வாய்
பயமான நோய்விலகும் பாலராலே
பாக்கியங்கள் நீயடைவாய் பிற்காலத்தில்
கயிலநாதன் மைந்தன் சாட்சியாக
களிப்புறுவாய் இன்னுமேழு நானிற்குள்ளே.
ஆரூடத்தில் முப்பத்தி ஆறு வந்திருப்பதால், நினைத்த காரியம் யாவும் கைகூடும். மனக்கவலை கொள்ளாதே!, கவலையுடன் பிரிந்து சென்றவர்கள் திரும்ப வந்து சேருவார்கள். துணைவியுடன், மாடு, மனை வாங்கி மகிழ்ச்சியாய் வாழ்வாய். பயம் ஏற்படுத்தும் நோய் விலகும். உன் பிற்காலங்களில் உன் பிள்ளைகளினால் பாக்கியங்கள் கிட்டும். சிவனின் மைந்தனான முருகன் சாட்சியாக இன்னும் ஏழு நாட்களிற்குள் மிகவும் மகிழ்ச்சியடைவாய் என்கிறார் அகத்தியர்.
௩௭. (37) வந்தால்..
மனக்கோட்டை கட்டி நீ மகிழ்ந்திடாதே
மலைத்தவுடன் கிரகமெல்லாம் கொடியதாச்சே
உனைகெடுக்க வேணபே ருறமேயாவார்
உகந்து நீ செய்தொழிலில் நஷ்டங்காண்பாய்
வினையமடன் வந்த நோய் வருத்தமாக்கும்
வேறிடத்தும் மாற்றி வைக்கும் கவலையாக்கும்
மனைவிமக்கள் சுற்றமும் உனைவெறுக்கும்
மாதமூன்று போனபின்னே மகிழுவாயே.
ஆரூடத்தில் முப்பத்தி ஏழு வந்திருப்பது, உனக்கு இப்போது கிரகங்களெல்லாம் நல்ல இடத்தில் இல்லை. மனக்கோட்டை கட்டி மகிழ்ச்சி அடையாதே. உன்னை வஞ்சிக்கவே எல்லோரும் உன்னிடம் வந்து சேர்வார்கள். நீ செய்யும் தொழில் எல்லாம் நட்டமே ஏற்படும். நோய் வந்து வருத்தம் கொடுக்கும். இடம் மாறி கவலை அடைவாய். உற்றார் உறவினர்கள் உன்னை வெறுப்பார்கள். இந்த நிலை எல்லாம் மூன்று மாதங்களின் பின் நீங்கும் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment